» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் வேனில் லக்கேஜ் பெட்டியின் கதவு திறந்து விபரீதம் : மினிலாரி டிரைவர் தலை துண்டித்து பலி
வியாழன் 4, ஏப்ரல் 2024 11:02:09 AM (IST)
குலசேகரம் அருகே ஓடும் வேனின் லக்கேஜ் பெட்டியின் கதவு திறந்து கொண்டதில் எதிரே வந்த மினிலாரி டிரைவர் கழுத்து துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், குலசேகரம் அருகே சூரியகோடு முள்ளங்குழிவிளயைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் டேவிட் (55) மினி லாரி டிரைவரான இவா் நேற்று காலையில், தனது இளைய மகளின் ஒன்றேகால் வயது ஆண் குழந்தையை மொபெட்டின் முன்னாள் அமர வைத்து வீட்டின் அருகில் சூரியகோடு சந்திப்புக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த வேனின் வலது பக்க லக்கேஜ் பெட்டியின் தகர கதவு திடீரென மேல் நோக்கி திறந்து கொண்டது. இதில் அந்த தகர கதவு ஜெஸ்டின் டேவிட்டின் கழுத்தை துண்டாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெஸ்டின் டேவிட் உயிரிழந்தாா். அதே வேளையில் மொபெட்டில் ஜெஸ்டின் டேவிட்டுக்கு முன்னால் அமா்ந்திருந்த குழந்தை காயமின்றி தப்பியது.
இதையடுத்து தகவலறிந்த குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் கணேஷ் குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெஸ்டின் டேவிட்டின் சலத்தை மீட்டு வழக்குப்பதிந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வேன் ஓட்டுநரான குலயறவிளையைச் சோ்ந்த ராஜேஷிடம் (34) விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஹாலிவுட்Apr 4, 2024 - 03:24:59 PM | Posted IP 162.1*****