» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வாக்குச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு.

புதன் 20, மார்ச் 2024 5:10:32 PM (IST)

நாகர்கோவிலில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சென்று ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நாகர்கோவில் மாநகரப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கழிப்பறைவசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஏறி செல்லும் வகையில் சாய்வு தளம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தம்மத்துக்கோணம், ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி  பொறியாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory