» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் வாக்குச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு.
புதன் 20, மார்ச் 2024 5:10:32 PM (IST)
நாகர்கோவிலில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகரப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கழிப்பறைவசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஏறி செல்லும் வகையில் சாய்வு தளம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தம்மத்துக்கோணம், ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.