» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லை-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திங்கள் 26, பிப்ரவரி 2024 8:41:56 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மார்ச் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 19577) தற்காலிகமாக மார்ச் 4, 5, 11 மற்றும் 12-ந்தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதேபோல ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (19578) மார்ச் 3, 4, 10 மற்றும் 11-ந்தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory