» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காங்கிரஸ் தலைமை சமரசம்: பாஜகவில் இணையும் திட்டத்தை கைவிட்ட விஜயதரணி!

திங்கள் 19, பிப்ரவரி 2024 10:59:29 AM (IST)

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமரசம் எதிரொலியாக பாஜகவில் இணையும் திட்டத்தை விஜயதரணி கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டப்பேரவை தலைவர் பதவி கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை இவரது தாத்தா ஆர்.பொன்னப்ப நாடார் கடந்த 1971-ம் ஆண்டு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, சட்டப்பேரவை கட்சி கொறடாவாக உள்ளார். இவர் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வசந்தகுமார் மறைந்த போதே இடைத்தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாக தெரிகிறது.

தற்போதும் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய் வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுறது. இதையறிந்த விஜயதரணி அதிருப்திக்கு உள்ளாகி, பாஜகவின் கதவை தட்டுவதற்காக டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவரை தொடர்புகொண்ட செல்வப்பெருந்தகை சமாதானப் படுத்தியதாகவும், அதனால் மனமாற்றம் அடைந்து பாஜகவில் இணையும் திட்டத்தை கைவிட்டு இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

கந்தசாமிFeb 23, 2024 - 01:57:03 PM | Posted IP 172.7*****

பேராசைக்காரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory