» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெங்களூரு-நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்: ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 8, பிப்ரவரி 2024 8:29:01 AM (IST)
இரட்டை பாதை பணி காரணமாக பெங்களூரு-நாகர்கோவில் ரயில் 6 நாட்கள் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே தெற்கு ரயில்வே இரட்டை பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 17235) வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும்.
நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (17236) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தாதர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11021) வருகிற 17-ந்தேதி விருதுநகர்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11022) வருகிற 19-ந்தேதி திருநெல்வேலி-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்றைய தினம் விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.