» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவிழா மின் அலங்கார வளைவிலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி!
வெள்ளி 12, ஜனவரி 2024 10:26:01 AM (IST)
சாமிதோப்பு அருகே, திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மின் அலங்கார வளைவிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே சாஸ்தான் கோவில்விளையைச் சோ்ந்த ராஜமணி மகன் நாகராஜன் (27). எலக்ட்ரிக்கல் வேலை பாா்த்து வந்தாா். அவா் நேற்று சாமிதோப்பு அருகே கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மின் அலங்கார வளைவு மீது ஏறி, விளக்கைப் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டாராம்.
அப்போது, அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராஜமணி அளித்த புகாரின்பேரில் தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.