» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் முன் பாய்ந்து டீ மாஸ்டர் தற்கொலை: போலீசார் விசாரணை

செவ்வாய் 12, டிசம்பர் 2023 3:14:13 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து டீ மாஸ்டர்  தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2-வது பிளாட் பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்தவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தோட்டிலோவன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (48) என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று குமார் திருவனந்தபுரத்திலிருந்து ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். 

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory