» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா வந்தபோது சோகம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாணவா் பலி!
திங்கள் 11, டிசம்பர் 2023 10:47:19 AM (IST)
திருவட்டாறு அருகே மாத்தூா் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா வந்த போது ஆற்றில் இறங்கிய மாணவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
திருவனந்தபுரம் வள்ளகடவு பகுதியில் உள்ள தனிப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் 22 போ் பள்ளி ஆசிரியா் சமீமா ஷாஜகான் தலைமையில் குமரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா். இவா்கள் பிற்பகலில் மாத்தூா் தொட்டிப்பாலத்திற்கு வந்தனா். இங்கு தொட்டிப் பாலத்தின் கீழ் ஒடும் பரளியாற்றில் மாணவா்கள் இறங்கி குளித்தபோது, நஜாப் (16), யாசிப் (25) ஆகியோரை தண்ணீா் இழுத்துச் சென்றது. உடனே கரையில் நின்றவா்கள், யாசிப்பை மீட்டனா். ஆனால் நஜாபை மீட்க முடியவில்லை.
தகவலறிந்த திருவட்டாறு போலீசார், குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா், பத்மநாபபுரம், நாகா்கோவில் மீட்புப் பணி வீரா்கள் விரைந்து வந்து பைபா் படகுகளின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனா். அப்பகுதியைச் சோ்ந்தவா்களும் ஆற்றில் இறங்கி தேடினா். மாலை 6.30 மணி வரை தேடுதல் நடத்தியும் நஜாபை கண்டுபிடிக்க முடியவில்லை. இருள் சூழ்ந்துவிட்டதால் தேடுதலை நிறுத்தினா். பின்னா் ஊா் மக்கள் ஆற்றுப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது சம்பவ இடத்திலிருந்து சுமாா் 50 மீட்டா் தொலைவில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்த நஜாபின் சடலத்தை மீட்டனா்.
உயிரிழந்த மாணவா் வள்ளக் கடவு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஷாநவாஸின் மகன் ஆவாா். இம்மாணவா் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்ததுடன் கூடுதாலாக தனிப்பயிற்சி பள்ளியிலும் படித்து வந்தாா். சடலத்தை திருவட்டாறு போலீசார்மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.