» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

சனி 9, டிசம்பர் 2023 12:28:16 PM (IST)



குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  தலைமையில் அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மனித உரிமை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுர சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக்,  நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) புகாரி, உதவி இயக்குநர் (கலால்) லொரேட்டா, மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அலுவலர் கனகராஜ், உசூர் மேலாளர்கள் ஜீலியன், தாஜ் நிஷா, வட்டாசியர்கள்,  அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory