» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
சனி 9, டிசம்பர் 2023 12:28:16 PM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மனித உரிமை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுர சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) புகாரி, உதவி இயக்குநர் (கலால்) லொரேட்டா, மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அலுவலர் கனகராஜ், உசூர் மேலாளர்கள் ஜீலியன், தாஜ் நிஷா, வட்டாசியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.