» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரள கழிவுகள் குவிப்பதை தடுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 7:53:23 PM (IST)
கேரளாவிருந்து பல்வேறு விதமான கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட துணை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த கழிவு பொருட்கள் கொட்டப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் இங்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இது சுற்று வட்டாரத்தில் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. ஆதலால் கேரளா எல்லையில் உள்ள நமது சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் நமது மாவட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

