» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரள கழிவுகள் குவிப்பதை தடுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 7:53:23 PM (IST)
கேரளாவிருந்து பல்வேறு விதமான கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட துணை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த கழிவு பொருட்கள் கொட்டப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் இங்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இது சுற்று வட்டாரத்தில் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. ஆதலால் கேரளா எல்லையில் உள்ள நமது சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் நமது மாவட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)


.gif)