» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரள கழிவுகள் குவிப்பதை தடுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 7:53:23 PM (IST)
கேரளாவிருந்து பல்வேறு விதமான கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட துணை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த கழிவு பொருட்கள் கொட்டப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் இங்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இது சுற்று வட்டாரத்தில் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. ஆதலால் கேரளா எல்லையில் உள்ள நமது சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் நமது மாவட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)