» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள்: துணை ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 9:08:06 AM (IST)

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் இலங்கை பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை நேரில் சந்தித்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஒப்பந்தங்களின் சிறப்பம்சங்கள்:
சுகாதாரம்: முல்லைத்தீவில் புதிய மருத்துவ வார்டு அமைத்தல், டேஹியட்டகண்டியா பகுதியில் குறைப்பிரசவ குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் முத்தூர் பகுதியில் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் மனநல மருத்துவமனைகளை அமைத்தல்.
உள்கட்டமைப்பு: ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில்வே வழித்தடத்தை மீண்டும் தொடங்குதல் மற்றும் மத்திய மற்றும் உவா மாகாணங்களில் மூன்று 'பெய்லி' பாலங்களை அமைத்தல்.
கல்வி: இலங்கை பிரதமருடன் கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள்: இந்திய நிதியுதவியுடன் மலையகப் பகுதிகளில் கட்டப்பட்ட 4,000 வீடுகளில், மீதமிருந்த 145 வீடுகளை நுவரெலியா லிட்லஸ்டேல் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பயனாளிகளிடம் ஒப்படைத்தார். அங்குள்ள இந்திய வம்சாவளி தமிழர்களிடம் பேசிய அவர், "இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு எப்போதும் உறுதியாக இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சீதை கோவிலில் வழிபாடு: ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதா எலியா பகுதியில் உள்ள சீதை கோவிலுக்குச் சென்று துணை ஜனாதிபதி வழிபாடு நடத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அரசின் உதவியுடன் இக்கோவில் மறுசீரமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது இரு நாடுகளின் வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, துணை ஜனாதிபதி நேற்று மாலை டெல்லி புறப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)


