» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்

செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

Russiattackship.jpg

உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, ரஷிய தூதருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இச் சூழலில், உக்ரைனின் ஒடேசா நகரத் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி கினியா பிசாவ் நாட்டுக்கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின.

இத் தாக்குதலில் கப்பலில் பயணித்த இந்திய மாலுமிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கக் கோரி, புதுடெல்லியிலுள்ள ரஷிய தூதருக்கு மத்திய அரசு முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. இச் சம்பவம் சர்வதேச அளவிலும், இந்திய வெளியுறவுத்துறை மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory