» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானுக்கு எதிராகத் திரளும் ஐரோப்பிய நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டறிக்கை
திங்கள் 2, மார்ச் 2026 5:41:51 PM (IST)

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் (E3 நாடுகள்) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
அணுசக்தி விவகாரத்தில் நிலவி வரும் கடும் போட்டி மற்றும் மோதல் காரணமாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஒருங்கிணைந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கியப் பகுதிகளில் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்தை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்
இந்தச் சூழலில், ஈரானின் நடவடிக்கைகளைக் கண்டித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "எங்கள் நெருங்கிய நட்பு நாடுகளைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் பொறுப்பற்ற தாக்குதல்கள், பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்தத் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் நலன்களையும், நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார். ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களை அழிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்."
பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு: இதற்கிடையில், ஈரானிய ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த, தற்காப்பு நடவடிக்கைகளுக்காகத் தங்கள் நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்தை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்
இந்தச் சூழலில், ஈரானின் நடவடிக்கைகளைக் கண்டித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "எங்கள் நெருங்கிய நட்பு நாடுகளைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் பொறுப்பற்ற தாக்குதல்கள், பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்தத் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் நலன்களையும், நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார். ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களை அழிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்."
பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு: இதற்கிடையில், ஈரானிய ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த, தற்காப்பு நடவடிக்கைகளுக்காகத் தங்கள் நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி: துபாயின் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்!
திங்கள் 2, மார்ச் 2026 10:20:21 AM (IST)

அமெரிக்கா, இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: ஈரான் தூதரகம்
திங்கள் 2, மார்ச் 2026 10:12:42 AM (IST)

கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 15 பேர் பலி
சனி 28, பிப்ரவரி 2026 5:03:54 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் : மத்திய கிழக்கில் போர் மூண்டது!
சனி 28, பிப்ரவரி 2026 4:51:57 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம்: வான்வழித் தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் பலி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:50:48 PM (IST)

இந்தியப் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய நெதன்யாகு!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:57:04 PM (IST)

