» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 15 பேர் பலி

சனி 28, பிப்ரவரி 2026 5:03:54 PM (IST)



பொலிவியா நாட்டின் எல் ஆல்டோ (El Alto) நகரில் கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பொலிவியா அரசுக்குச் சொந்தமான கரன்சி நோட்டுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த ராணுவ விமானம், எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையில் தரை இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் நிலைதடுமாறி அருகிலிருந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்களும் நசுங்கி பலத்த சேதமடைந்தன.

இந்த கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட கட்டுக்கட்டான கரன்சி நோட்டுகள் சாலை எங்கும் சிதறி விழுந்தன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அங்குக் கூடியிருந்த மக்கள் சிதறிக்கிடந்த பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, மீதமுள்ள பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory