» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது : மைக்ரோசாப்ட் நிறுவனம்
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:10:42 PM (IST)

எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன.
இதனால், வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என அச்சம் ஐடி துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். அதேவேளையில் ஏஐ பயன்பாடு காரணமாக வேலையின் திறன் கூடும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இதற்கிடையே ஏஐ வருகையால் எந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு ஏற்படும் எவை எல்லாம் பாதிக்கப்படாது? என்ற ஆய்வறிக்கையை மைக்ரோசாப்ட் நடத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நடத்திய ஆய்வில், செவிலியர், மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர்கள், டயர் பழுதுபார்ப்பவர்கள் உள்ளிட்ட பணிகளை ஏஐ செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ளது.
சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)
