» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது. இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.
இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)


.gif)