» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

எஸ்பிஐ ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 15+ ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் குறித்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டண மாற்றம் 'அடிப்படை சேமிப்பு வைப்புக் கணக்கு' (BSBDA - Basic Savings Bank Deposit Account) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்கத் தேவையில்லாத எளிய சேமிப்புக் கணக்குகளாகும்.
இக்கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு முதல் 4 முறை ஏடிஎம்மில் பணம் எடுப்பது முற்றிலும் இலவசம். 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 15 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து விதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் எவ்வித கட்டணமுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளலாம்.
மற்ற வழக்கமான சேமிப்புக் கணக்கு (Regular Savings Account) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம்போல் மாதத்திற்கு 5 முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், வங்கிக் கிளையில் கூட்டத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் ஆதங்கம்:
பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு 4 முறைக்கு மேல் கட்டணம் விதிப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது என வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஏடிஎம்களில் ரூ. 500 நோட்டுகள் கிடைக்காததால், சிறு தொகைகளை பலமுறை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)


