» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)
E-20 ரக எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குக் காப்பீடு மறுக்கப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடெங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் E-20 ரக எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் எஞ்சின்களில் பழுது ஏற்படுவதாகவும், அவ்வாறு ஏற்படும் பழுதுகளுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கச் சில நிறுவனங்கள் மறுப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, E-20 தொழில்நுட்பம் இல்லாத பழைய வாகனங்களில் இப்பிரச்சினை அதிகம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.இக்குற்றச்சாட்டுகளுக்குத் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு என்பது உலகளாவிய அளவில் நடைமுறையில் உள்ள ஒன்று என்றும், இதனால் வாகனங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் உறுதிபடக் கூறியுள்ளது.
E-20 எத்தனால் பெட்ரோலால் வாகனங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவை காப்பீட்டின் கீழ் வராது என்று பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்களில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தொழில்நுட்பப் பிரச்சினைகளும் வழக்கம் போல் காப்பீட்டுப் பாதுகாப்பின் (Insurance Cover) கீழ் முழுமையாக வரும் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இதன் மூலம் எத்தனால் பயன்பாட்டினால் நாட்டிற்குப் பெரும் பொருளாதார நன்மைகள் ஏற்படுவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)


