» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவர்கள் மீதே கார் மோதி விபத்து - 8பேர் உயிரிழப்பு!

புதன் 6, மே 2026 11:28:44 AM (IST)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பைக் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பைக்குகளில் வந்த இருவர் காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜலால்பூர் பகுதியில் இருந்து எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்த கார் ஒன்று, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மேலும் இருவர் தண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கார் டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மனிதாபிமானத்துடன் மற்றவர்களைக் காப்பாற்றச் சென்ற 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory