» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

PresidentIndia.jpg

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசியக் கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத்திருத்த மசோதா 2026-க்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மாசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு இணையான சட்டபூர்வப் பாதுகாப்பு தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கும் கிடைத்துள்ளது.

தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் போன்ற தேசியச் சின்னங்களுடன் 'வந்தே மாதரம்' பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.

இனி அரசு மற்றும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்படும். வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலின் 6 சரணங்களும் முழுமையாகப் பாடப்படும்.

வரும் ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், முதன்முறையாக 'வந்தே மாதரம்' முழுமையாகப் பாடப்பட்ட பின்னரே தேசிய கீதம் பாடப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory