» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)



தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கக் கோரியும், சனாதன தர்மம் குறித்து சர்ச்சை தரும் வகையில் பேசியதாகவும் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. "சனாதனத்தை கொசுவைப் போல ஒழிக்க வேண்டும்" என்ற உதயநிதியின் பேச்சு உள்ளிட்டவை நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், குற்றங்களை வரையறுப்பதும், புதிய சட்டங்களை உருவாக்குவதும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உரிய விளக்கங்களை மட்டுமே நீதிமன்றங்கள் வழங்க முடியும். புதிய சட்டங்களை இயற்றும்படி அரசை நீதிமன்றம் வற்புறுத்த முடியாது.

சமூக மாற்றத்திற்கு ஏற்ப, வெறுப்புப் பேச்சுகளைத் (Hate Speech) தடுக்கத் தேவையான புதிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு கொண்டு வரலாம். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், உதயநிதி உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory