» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஈரான் தொலைபேசியில் அழைப்பு விடுக்கட்டும் : பேச்சுவார்த்தையை தொடரலாம் - ட்ரம்ப்

திங்கள் 27, ஏப்ரல் 2026 11:13:06 AM (IST)

ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை போன் மூலம் பேசலாம் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் எங்களிடம் வரட்டும் அல்லது தொலைபேசியில் அழைப்பு விடுக்கட்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது குறித்து அவர் விவரம் அளிக்கவில்லை.

முன்னதாக, அமெரிக்க அரசின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் ஈரானுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதற்காக ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தலை​மையி​லான குழு சனிக்கிழமை அன்றே பாகிஸ்தான் சென்றது. இருப்பினும் அமெரிக்காவோடு நேரடியாக இல்லாமல் பாகிஸ்தான் மூலம் தங்களது கோரிக்கைகள், நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க தூதர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததாக ட்ரம்ப் அறிவித்தார்.

சமநிலை தவறுகிறதா பாகிஸ்தான்? - இதற்கிடையே ஈரான் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெஸாய், எக்ஸ் தள ட்வீட் செய்துள்ளார். "பாகிஸ்தான் எங்களின் நட்பு நாடு. இருப்பினும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர்களின் மத்தியஸ்தம் அறவே பொருந்தவில்லை. அவர்களது நம்பகத்தன்மை இதற்கான காரணமாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அவர்களது நடுநிலை மீது சந்தேகம் எழுகிறது. எப்போதுமே ட்ரம்ப்புக்கு ஆதரவாக செயல்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை” என அதில் அவர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இழுபறியாகி உள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்​கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது. எனினும் அமைதி முயற்​சிக்​காக கால​வரை​யின்றி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இதனால் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory