» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 12:08:02 PM (IST)

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். மாளிகையில் உள்ள பூஜை அறையில், இந்து தெய்வங்களின் படங்களுக்குப் பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இந்தச் சந்திப்பின் போது, பிரதமருக்கு நினைவுப் பரிசாக முருகன் திருவுருவப் படத்தை சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இன்று குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு நமது முன்னோர்களின் ஞானத்தை வெளிப்படுத்துவதுடன் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வைப் போற்றும் ஒப்பற்ற விழாவாகும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டு தினத்தில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்."
பிரதமரின் வாழ்த்து: இந்தச் சந்திப்பு குறித்துப் பிரதமர் மோடியும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அனைவரும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று விளங்கப் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருத்வாராவில் வழிபாடு: தமிழ்ப் புத்தாண்டு சந்திப்பைத் தொடர்ந்து, 'பைசாகி' பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவுக்குச் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்றார். அங்கு மக்களின் அமைதி மற்றும் நல்வாழ்விற்காக அவர் பிரார்த்தனை செய்தார். அப்போது டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

