» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.25%ஆகத் தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 4:39:12 PM (IST)
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான 'ரெப்போ ரேட்' எவ்வித மாற்றமுமின்றி 5.25 சதவீதமாகத் தொடரும். சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான மாதத் தவணை (EMI) தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்பது சாமானிய மக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாகும்.
அதேபோல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:52:58 PM (IST)

சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை: ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:08:58 PM (IST)

பாகிஸ்தான் மிரட்டலுக்கு பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – மம்தா பானர்ஜி காட்டம்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பதவியேற்பு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:19:08 PM (IST)

இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை மே 31 வரை ரத்து: போர்ப் பதற்றத்தால் அதிரடி முடிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:29:30 AM (IST)

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

