» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)
அரபு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 'அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்' (Essential Services Maintenance Act) மற்றும் 1951-ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருட்களைப் பதுக்குபவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை இனி மத்திய அரசே நேரடியாகக் கண்காணிக்கும். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், எரிபொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடையால் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாடு உருவாவதைத் தடுக்கவும், சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


