» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
புதன் 16, ஜூலை 2025 5:18:58 PM (IST)

பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானியின் துரித நடவடிக்கையால் விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர்.
தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் 6E 2482, 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தின் ரன்வேயில் ஓடுபாதையில் தரையிறங்கும் இடத்துக்கு முன்பே விமானம் தரையிறங்கியுள்ளது. மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை மீண்டும் டேக் ஆப் செய்தனர்.
பின்னர், விமானம் மூன்று முறை வானில் வட்டமிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இதனால், விமானத்தில் இருந்த 173 பயணிகளும் நூழிலையில் உயிர் தப்பினர். விமானிகளின் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சமயோசித முடிவு, விமானம் விபத்திலிருந்து தப்புவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, பாட்னா விமான நிலையத்தின் ஓடுபாதை பிற விமானங்களின் ஓடுபாதையுடன் ஒப்பிடும் போது குறுகிய தூரமுடையது என்பது கவனிக்கத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 125 யூனிட் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை : முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:57:30 AM (IST)

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!
வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)

சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம்? - மத்திய சுகாதாரத்துறை மறுப்பு
புதன் 16, ஜூலை 2025 10:29:57 AM (IST)

தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி
புதன் 16, ஜூலை 2025 10:21:28 AM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)
