» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேனிலவு சென்ற தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் : கணவரை கொன்ற மனைவி கைது!
திங்கள் 9, ஜூன் 2025 12:10:45 PM (IST)

மேகலாயாவில் தேனிலவு சென்ற தம்பதி மாயமான சம்பவத்தில், கணவரை கூலிப்படை வைத்து கணவரை கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோனம், ராஜ் குஷ்வாஹா என்ற மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததைக் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சோனமின் தந்தை, காவல்துறையினரின் கூற்றுகளை நிராகரித்து, மேகாலயா காவல்துறை இந்த வழக்கை ஜோடிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருவதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)

காதலனை பழிவாங்க திட்டம்: 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் பொறியாளர் கைது!
புதன் 25, ஜூன் 2025 12:35:30 PM (IST)

கடந்த ஆண்டு 1.46 கோடி பாஸ்போர்ட்டுகள் வினியோகம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
புதன் 25, ஜூன் 2025 8:45:56 AM (IST)

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)
