» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண்கள் சமமாக அதிகாரம் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் : பிரதமர் மோடி
ஞாயிறு 8, ஜூன் 2025 8:12:08 PM (IST)

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு சமூக மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்து 11 ஆண்டுகள் நிறைடைந்ததையொட்டி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டது.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தில் மோடி கூறியிருப்பதாவது; முன்பு பெண்கள் வீடுகளில் முடங்கி கிடந்த காலம் மாறி, நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுப்பவர்களாக உள்ளனர். 'நாரி ஷக்தி' எனும் திட்டமானது, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அதிகாரம் அளிக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம், பெண்கள் மதிப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழ முடியும்.
இந்திய பெண்கள் பல தடைகளை எதிர்கொண்டனர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியிருந்தனர். 2014ம் ஆண்டு மோடி பிரதமர் ஆன பிறகு, இவை அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு சமூக மாற்றம் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாவசிய தேவை. பெண்கள் சமமாக அதிகாரம் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற முடியும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)

காதலனை பழிவாங்க திட்டம்: 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் பொறியாளர் கைது!
புதன் 25, ஜூன் 2025 12:35:30 PM (IST)

கடந்த ஆண்டு 1.46 கோடி பாஸ்போர்ட்டுகள் வினியோகம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
புதன் 25, ஜூன் 2025 8:45:56 AM (IST)

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)
