» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி
ஞாயிறு 25, மே 2025 8:45:10 PM (IST)
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி "மனதின் குரல்" நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இன்று ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக திரண்டுள்ளது. தேசம் கோபாத்தில் நிறைந்துள்ளது, ஆனால் உறுதியாக உள்ளது. இன்று ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதேயாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நமது படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது அசாதாரணமானது. ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டும் இல்லை. அது நமது உறுதிப்பாடு, தைரியம் மற்றும் இந்தியாவின் மாறிவரும் சித்திரம். இந்தச் சித்திரம், நாட்டை தேச பக்தியால் நிரப்பி, அதனை மூவர்ணக்கொடியின் வண்ணங்களால் வரைந்துள்ளது.
நாட்டின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் மூவர்ணக்கொடி யாத்திரை நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக்கொடியுடன் கூடி நமது படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். பல நகரங்களில் இளைஞர்கள் சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்களாக இணைத்துக்கொண்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் அதனை தங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். பிஹாரின் கதிகாரில், உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மற்றும் பல நகரங்களில் அந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெயர் வைத்துள்ளனர்.
நமது வீரர்கள் பயங்கரவாத தளங்களை அழித்தனர். அது அவர்களின் அசாத்திய துணிச்சலாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களாலும் சாத்தியமானது. இந்தப் பிரச்சாரத்துக்கு பின்பு, உள்ளூர் மக்களுக்கான குரல் குறித்து நாடு முழுவதும் ஒரு புதிய ஆற்றல் வளர்ந்துள்ளது.
ஒரு பெற்றோர், தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்காக இந்திய தயாரிப்பு பொருள்களையே வாங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளனர். தேசபக்தி குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. பல இளைஞர்கள் இந்தியாவிலேயே திருமணம் என்று உறுதி எடுத்துள்ளனர். மேலும் சிலர் இனி தாங்கள் வழங்கும் எந்த ஒரு பரிசு பொருள்களும் இந்திய கைவினைஞர்களின் தயாரிப்பாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)

காதலனை பழிவாங்க திட்டம்: 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் பொறியாளர் கைது!
புதன் 25, ஜூன் 2025 12:35:30 PM (IST)

கடந்த ஆண்டு 1.46 கோடி பாஸ்போர்ட்டுகள் வினியோகம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
புதன் 25, ஜூன் 2025 8:45:56 AM (IST)

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)
