» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்: கர்நாடக அமைச்சர் ஆவேசம்!
சனி 3, மே 2025 5:40:21 PM (IST)
பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸில் ஐக்கியமானார் ஸமீர் அகமது கான். இந்தநிலையில், சாம்ராஜ்பேட் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டுவசதி, வஃக்ப், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: ”நாம் இந்தியர்கள், ஹிந்துஸ்தானியர்கள்; அப்படியிருக்கையில், நமக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பாகிஸ்தான் நமக்கு எப்போதுமே எதிரிதான். நாட்டுக்கு தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு அனுமதியளித்தால், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தேவையான வெடிபொருள்களை தாருங்கள், அவற்றை அணிந்துகொண்டு பாகிஸ்தான் செல்ல தயார். நான் நகைப்புக்காக ஒன்றும் இப்படிப் பேசவில்லை. எனது உயிரை நாட்டுக்கா தியாகம் செய்யவும் தயார்” என்று கூறியிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)
