» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை: சத்தீஷ்காரில் அதிர்ச்சி சம்பவம்

வெள்ளி 29, டிசம்பர் 2023 5:13:03 PM (IST)

சத்தீஷ்காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பிஎஸ்யூபி காலனியில் வசித்து வந்தவர் லகன் லால் (வயது 48). இவர் இரும்பு வியாபாரி ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராணு சென் (42). இவர்களது மகள் பாயல் (14). இந்நிலையில், நேற்று லகன் லால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் வீட்டின் கதவை தட்டினர். 

ஆனால் கதவை யாரும் திறக்காத நிலையில் திக்ரபாரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லகன் லால் அவரது மனைவி மற்றும் மகள் மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும், சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory