» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோச்சடையான் பட வழக்கு: ரஜினி மனைவி லதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் முன்ஜாமீன்!

புதன் 27, டிசம்பர் 2023 11:47:02 AM (IST)

கோச்சடையான் படம் தொடர்பான வழக்கில் ரஜினிகாந்த்  மனைவி லதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

பெங்களூரு, நடிகர் ரஜினி நடித்த 'கோச்சடையான்' என்ற, 'அனிமேஷன்' திரைப்படம் 2014ல் வெளியானது. அதிக முதலீட்டில் தயாரான இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை. இந்த படத்தை தயாரிப்பதற்காக, 'மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் முரளி என்பவர், 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம், 6.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

இதற்கு, ரஜினி மனைவி லதா, உத்தரவாதம் அளித்து, கையெழுத்திட்டார். முரளி பணத்தை தரவில்லை. இதனால், 'ஆட் பீரோ' நிறுவனம் சார்பில், மோசடி செய்ததாக லதா மீது பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில், 2015ல் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் கரியம்மனவர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

லதா நேரில் ஆஜராகி, தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கோரினார். இரண்டு தனி நபர் உத்தரவாதத்தின் அடிப்படையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின் தன் வீட்டில் பேட்டி அளித்த லதா ரஜினிகாந்த், 'என் மீது வழக்கு போட்டவர்கள் மீது நான் அவதுாறு வழக்கு தொடுக்க உள்ளேன். நீதிமன்றத்தை மதிப்பதால் நேரில் ஆஜரானேன்,' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory