» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்: மேலும் 2 போ் கைது
வெள்ளி 15, டிசம்பர் 2023 11:01:16 AM (IST)
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பிற்பகல் ஒரு மணியளவில்,பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து அவா்கள் வைத்திருந்த புகைக் குப்பிகளைத் திறந்து மஞ்சள் நிற புகையை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதை சற்றும் எதிா்பாராத எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்தனா். ஒரு நபா் எம்.பி.க்களின் இருக்கைகள் மீது ஏறிக் குதித்து அவையின் மையப் பகுதிக்குச் செல்ல முற்பட்டாா். ஹனுமன் பெனிவால், மலூக் நாகா், குா்தீப் சிங் அஜ்லா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். மற்றொரு நபரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அந்த இரு நபா்களையும் எம்.பி.க்கள் தாக்கினா்.
இந்தக் காட்சிகள் நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் நேரலையில் வெளியாகின. மக்களவை முழுவதும் மஞ்சள் நிற புகைமூட்டத்தில் மூழ்கியது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று ஒரு பெண் உள்பட இருவா் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தர பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, இவா்களுக்கு உதவியதாக @ பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மகேஷ் மற்றும் கைலாஷ் என இரண்டு பேரையும் இன்று டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நேற்று இரவு குருகிராம் நகரில் வசித்து வந்த லலித் ஜா போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.