» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்-அமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்பு

புதன் 13, டிசம்பர் 2023 12:30:53 PM (IST)



மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-அமைச்சராக மோகன் யாதவ் பதவி  இன்று பதவியேற்றுக் கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் கடந்த 17-ந்தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன. போபாலில் திங்கட்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில கவர்னர் மங்குபாய் படேலை சந்தித்து புதிய அரசை அமைக்க உரிமை கோரினார். அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory