» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜவஹர்லால் நேரு குறித்த கருத்து: அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 3:54:04 PM (IST)

வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ஜவஹர்லால் நேரு குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு ராகுல் காந்தி, பதலடி கொடுத்துள்ளார். 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பாஜக முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மாநிலங்களவையில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று ராகுல் காந்தி பேசியதாவது, "ஜவஹர்லால் நேரு அவரின் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அவருக்கு உண்மையான வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது எல்லாமே மக்களின் கவனத்தை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து திசை திருப்புவதற்காக செய்யப்படுபவை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பாஜக பயப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஏழை, எளிய மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு காங்கிரஸ் போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

makkalDec 16, 2023 - 10:40:35 AM | Posted IP 172.7*****

Nehru entha siraiyal irunthar. voc mathiri kodumaigal anupavithara

இந்தியன்Dec 12, 2023 - 04:25:51 PM | Posted IP 162.1*****

வரலாறு எல்லாம் தெரியும். இத்தாலி பார் டான்சர் புள்ளை பப்பு பேச்சை பாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory