» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 52 சவரன் நகை மாயம் : போலீசார் விசாரணை

புதன் 10, செப்டம்பர் 2025 8:10:44 PM (IST)

சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 52 பவுன் நகைகள் மாயமாது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மண்ணடியில் பழைய நகைகளை புது நகைகளாக மாற்றி வியாபாரம் செய்பவர் ஆரிஃப். இவர், தனது 52 பவுன் நகைகளை சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் சிவபாலனிடம் கொடுத்து இந்த நகையை ஆறுமுகனேரியில் காத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அபுதாஹிரிடம் (48) கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார்.

கடந்த 8 ஆம் தேதி இரவு சென்னை கோயம்பேடில் இருந்து திருச்செந்தூருக்குப் புறப்பட்ட அந்த ஆம்னி பேருந்து ஆறுமுகனேரிக்கு வந்ததும் அங்கு காத்திருந்த அபுதாஹிர் நகையை ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் சிவபாலன் நகைப் பையைத் தேடியபோது நகைப்பை காணவில்லை.

இதையடுத்து அபுதாஹிர் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், ஆறுமுகனேரி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பஸ் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டீக்கடையில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

அங்கு கிளீனர் உள்பட பலரும் இறங்கிச்சென்று டீ குடித்தனர். ஆனால் அங்கிருந்து கிளீனர் மீண்டும் பஸ்சில் ஏறவில்லை. எனவே அங்கிருந்துதான் சுப்பையா நகைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருட்டுபோன பையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 15 வகையான தங்க நகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பிய கிளீனரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory