» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நீட் தேர்வு!
சனி 4, மே 2024 10:37:43 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 5196 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றூர் என்.வி.கே எஸ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் மரியா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் விங்ஸ் பொறியல் கல்லூரி, ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் கல்லூரி ஆரல்வாய்மொழி லயோலா பொறியியல் கல்லூரி,பால் குளம் ரோகினி பொறியியல் கல்லூரி, ஆகிய ஏழு கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது இவற்றில் மொத்தம் 5196 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் தேர்வு நேரமானது மதியம் 2 மணியிலிருந்து மாலை 5:20 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.