» சினிமா » செய்திகள்
சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)
சமீபத்தில் தெலுங்குத் திரைப்பட விழாவொன்றில் நடிகர் பார்த்திபன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அவர் உருக்கமான விளக்கத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு உச்ச நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், மேடையில் பேசும்போது: "நான் ஒரு நாயுடு பையன்... சென்னையில் வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, "எப்போதும் சாதிக்கு எதிராகப் பேசும் பார்த்திபன், இப்போது ஏன் சாதியைக் குறிப்பிட வேண்டும்?" என நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், அதில் கூறியிருப்பதாவது: "என் பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில விஷயங்கள் தேவையின்றிப் பெரிய விவாதமாகி விடுகின்றன. நான் எவ்வளவு தமிழ் பற்று கொண்டிருந்தாலும், என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாது. என் பிறப்பு என் பொறுப்பு அல்ல; எந்தக் குழந்தையும் இன்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று கேட்டுப் பிறப்பதில்லை."
எனக்கு சோறு, சுகம் என எல்லாவற்றையும் தந்தது தமிழ் தான். நான் எங்கு சென்றாலும் தமிழைப் பெருமையாகச் சொல்வேன். நான் தமிழுக்காகவே வாக்கப்பட்டவன். தெலுங்கு மேடையில் பேசும்போது எனக்குச் சற்று பதற்றமாக இருந்தது. திணறாமல் ஏதாவது பேச வேண்டும் என்ற வேகத்தில் அந்த வார்த்தை வந்துவிட்டது.
மேலும், அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தனக்குப் பதிலாக வேறொருவர் டப்பிங் பேசியுள்ளதாகவும், ஆனால் அதன் தமிழ்ப் பதிப்பிற்குத் தானே குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அந்தப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். "தமிழ் உயர்ந்த மொழி, அதில் அன்பும் கருணையும் இருக்கிறது; தயவுசெய்து இதனைப் பெரிய பிரச்சனையாக்க வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

