» சினிமா » செய்திகள்
ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது, சிலர் செய்த எதிர்மறையான விமர்சனங்கள் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது அவர்களே கொண்டாடுகிறார்கள். ஆனால், இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? நிறைய பணமும், நேரமும் அப்படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படம் வெளியீட்டின் போது திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் இப்போது கொண்டாடினாலும் எனக்கு அதில் மகிழ்ச்சியில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எழுதி வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 2010-ம் ஆண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு தோல்வியை தழுவியது. இப்போது அதன் காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றை இணையவாசிகள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

