» சினிமா » செய்திகள்

தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேச்சு: ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் கண்டனம்!

புதன் 1, அக்டோபர் 2025 10:31:17 AM (IST)



காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 17 கோடி பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த காந்தாரா - 1 புரமோஷனில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், தெலுங்கு பேசாமல் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது கண்டிக்கத்தக்கது என விமர்சித்து வருகின்றனர்.

உண்மையிலேயே, ரிஷப்புக்கு தெலுங்கு தெரியாதா இல்லை கன்னடத்தில் பேசும் முடிவோடு வந்தாரா எனத் தெரியவில்லை. அதேநேரம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே நேர்காணல்களை அளித்து வரும் ரிஷப் ஷெட்டிக்கு தெலுங்கு மட்டும் தெரியாதா என்றும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory