» சினிமா » செய்திகள்

மல்யுத்த சங்க தேர்தல் சர்ச்சை: நடிகை ரித்திகா சிங் வருத்தம்!

திங்கள் 25, டிசம்பர் 2023 12:39:15 PM (IST)

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரிஷ் பூஷணின் பாலியல் அத்துமீறல்களை கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல மல்யுத்த வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் கூறும்போது, "சம்மேளத்துக்கு ஒரு பெண் தலைவராக வரவேண்டும் கருதினோம். ஆனால் பிரிஜ் பூஷண் ஆதரவாளர் ஜெயித்து இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மல்யுத்த விளையாட்டை கைவிடுகிறேன்'' என்றார்.

இதையடுத்து தமிழில் இறுதிசுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "சாக்‌ஷி மாலிக்கை இந்த நிலைமையில் பார்க்கும் போது இதயம் உடைந்து போகிறேன். 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி மாலிக் தனது கனவு, கடின உழைப்பு, நம்பிக்கைகளை கைவிட்டு விளையாட்டில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லி இருப்பது பேரழிவாகும். போராட்டத்தின்போதும் அவரை அவமதித்தனர். இப்போது இந்த நிலைமைக்கு உள்ளாக்கி உள்ளனர். இது கொடுமையானது'' என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory