» சினிமா » செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய ரஜினிகாந்த்

வெள்ளி 22, டிசம்பர் 2023 3:30:43 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை வீடு வீடாக வழங்குவற்கு ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார்.

கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானார்கள். ஆயிரம் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பொதுமக்களின் உடைமைகளை வெள்ளம் அடித்து சென்றது. உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. நடிகர் ரஜினிகாந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். நேற்று 4 மாவட்டங்களிலும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் போர்வை, பாய், உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீடு வீடாக வழங்குவற்கு அனுப்பி வைத்துள்ளார்.

திருநெல்வேலியில் இருந்து வாகனங்களில் இந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வீடு வீடாக வினியோகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory