» சினிமா » செய்திகள்

நடிகர் விஜய் குறித்த கேள்வி: செய்தியாளருடன் சரத்குமார் வாக்குவாதம்!

சனி 1, ஜூலை 2023 12:15:14 PM (IST)

நடிகர் விஜய் குறித்த கேள்வியால் நடிகர் சரத்குமார் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘சூர்யவம்சம் 2 பாகம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி என்னிடம் தெரிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போனது. மீண்டும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளன. சூர்யவம்சத்தை இன்றைய இளைஞர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. 

ஆனால், குடும்பம் படமாக இருப்பதால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆளுநருக்கு டிஸ்மிஸ் செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர் நிதானமாக முடிவெடுத்திருக்கலாம். நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கான உரிமை உள்ளது" என்றார்.

அப்போது தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பியதால் கடுப்பான சரத்குமார், செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீங்கள் எந்த நிறுவனம்?" என தொடர்ந்து கேள்வி எழுப்பிய சரத்குமார், "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் நிறுவனத்தின் கருத்து என்ன?" என செய்தியாளரை நோக்கி கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory