» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
திங்கள் 2, மார்ச் 2026 10:24:57 AM (IST)

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி 'மேட்ச் வின்னர்' ஆக ஜொலித்தார். 196 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
வெற்றிக்குப் பிறகு சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: "பல ஆண்டுகளாக இந்த ஃபார்மெட்டில் நான் விளையாடி வருகிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இருந்து ஆட்டம் குறித்து நிறைய கற்றுள்ளேன். அந்த அனுபவம் எனக்குப் பெரிதும் உதவியது. அவர்கள் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எப்படித் தங்கள் பாணியை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன்.
நான் விளையாடத் தொடங்கிய நாள் முதலே, நாட்டுக்காக இது போன்றதொரு இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று விரும்பினேன். இது ஒரு சிறப்பான பயணம். எனது கிரிக்கெட் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கண்டுவிட்டேன். இடையில் 'என்னால் முடியுமா?' என்ற சந்தேகம் கூட எனக்குள் இருந்தது. இந்தத் தருணத்தில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், ஆனால் இந்த ஆட்டத்தில் இலக்கை விரட்டினோம் (Run Chase). இது ஒரு வித்தியாசமான அனுபவம். இவ்வளவு சிறப்பான இன்னிங்ஸை ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனது வாழ்நாளின் சிறந்த நாட்களில் ஒன்று என்பது உறுதி" என்றார்.
வெற்றிக்குப் பிறகு சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: "பல ஆண்டுகளாக இந்த ஃபார்மெட்டில் நான் விளையாடி வருகிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இருந்து ஆட்டம் குறித்து நிறைய கற்றுள்ளேன். அந்த அனுபவம் எனக்குப் பெரிதும் உதவியது. அவர்கள் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எப்படித் தங்கள் பாணியை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன்.
நான் விளையாடத் தொடங்கிய நாள் முதலே, நாட்டுக்காக இது போன்றதொரு இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று விரும்பினேன். இது ஒரு சிறப்பான பயணம். எனது கிரிக்கெட் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கண்டுவிட்டேன். இடையில் 'என்னால் முடியுமா?' என்ற சந்தேகம் கூட எனக்குள் இருந்தது. இந்தத் தருணத்தில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், ஆனால் இந்த ஆட்டத்தில் இலக்கை விரட்டினோம் (Run Chase). இது ஒரு வித்தியாசமான அனுபவம். இவ்வளவு சிறப்பான இன்னிங்ஸை ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனது வாழ்நாளின் சிறந்த நாட்களில் ஒன்று என்பது உறுதி" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)


