» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்ச்சைக்குரிய சைகை: பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:38:42 AM (IST)
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிராஜ், கே.எல்.ராகுல் அசத்தல்: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:32:17 PM (IST)

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை: சூர்ய குமார்
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:01:59 PM (IST)

பாகிஸ்தான் அமைச்சரிடம் வெற்றிக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:31:53 AM (IST)

குல்தீப், திலக் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:42:03 AM (IST)

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
சனி 27, செப்டம்பர் 2025 10:12:52 AM (IST)

சாய் சுதர்சன், கே.எல். ராகுல் அபாரம் : 412 இலக்கை விரட்டி இந்தியா ஏ அணி சாதனை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:08:30 PM (IST)
