» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்ச்சைக்குரிய சைகை: பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:38:42 AM (IST)
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் சுருண்டது இந்திய அணி!
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)


.gif)