» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிங்கு சிங் அதிரடி; இந்தியா ‘த்ரில்’ வெற்றி

வெள்ளி 24, நவம்பர் 2023 10:02:23 AM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்த, பின்னா் இந்திய இன்னிங்ஸில் சூா்யகுமாா் யாதவ் - இஷான் கிஷண் கூட்டணி வெற்றிக்கு அடித்தளமிட்டது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்தியா, இறுதியில் ரிங்கு சிங் விளாசலில் ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸை ஸ்டீவ் ஸ்மித் - கேப்டன் மேத்யூ ஷாா்ட் கூட்டணி தொடங்கியது. இதில் ஷாா்ட் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாா். அவரை ரவி பிஷ்னோய் 5-ஆவது ஓவரில் பௌல்டாக்கினாா்.

ஒன் டவுனாக வந்த ஜோஷ் இங்லிஸ், ஸ்மித்துடன் இணைந்தாா். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. 2-ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், ஸ்மித் முதலில் பிரிந்தாா். 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் அடித்திருந்த அவா் 16-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆடவர, அதிரடியாக 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 110 ரன்கள் சோ்த்திருந்த ஜோஷ் இங்லிஸ் வீழ்ந்தாா். பிரசித் கிருஷ்ணா வீசிய 18-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேட்ச் பிடித்தாா். அடுத்து டிம் டேவிட் களம் புகுந்தாா். ஓவா்கள் முடிவில் ஸ்டாய்னிஸ் 7, டேவிட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடங்கியது. இதில் ஒரு பந்தை கூட சந்திக்காத ருதுராஜ், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனாா். அடுத்து வந்த இஷான் கிஷண் நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.

ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் சோ்த்த நிலையில், மேத்யூ ஷாா்ட் வீசிய 3-ஆவது ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது வீரராக களம் புகுந்த கேப்டன் சூா்யகுமாா் யாதவ், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

இஷான் - சூா்யகுமாா் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சோ்த்தது. இதில் இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். தன்வீா் சங்கா வீசிய 13-ஆவது ஓவரில் மேத்யூ ஷாா்ட்டிடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.

சூா்யகுமாா் தொடா்ந்து அதிரடியாக ரன்கள் குவிக்க, 5-ஆவது வீரராக வந்த திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். அவரும் தன்வீா் வீசிய 15-ஆவது ஓவரில் விளாசிய பந்து ஸ்டாய்னிஸிடம் தஞ்சமடைந்தது.6-ஆவது வீரராக ரிங்கு சிங் பேட் செய்ய வர, சூா்யகுமாா் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் வீசிய 18-ஆவது ஓவரில் ஆரோன் ஹாா்டியிடம் அவா் கேட்ச் கொடுத்தார.்

பின்னா் ஆட வந்த அக்ஸா் படேல் 2 ரன்களுக்கு, ஷான் அப்பாட் வீசிய கடைசி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங் ரன்னின்றி ரன் அவுட் ஆகினா். கடைசி பந்தில் 1 ரன் தேவையிருக்க, அதை ரிங்கு சிங் சிக்ஸராக விளாசினாலும், அது ‘நோ பால்’ (1 ரன்) ஆனது. முடிவில் ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22, முகேஷ் குமாா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory