» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை': ஐ.சி.சி., அதிரடி நடவடிக்கை
புதன் 22, நவம்பர் 2023 12:40:13 PM (IST)
மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி,சி) தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆண்களை போன்று மகளிரும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அதேபோல் ஆண்களுக்கு இணையாக பதக்கத்தை வென்று வருகின்றனர். இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவர் விளையாட ஐ.சி.சி., தடை விதித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக இது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஐ.சி.சி., ஆலோசனை நடத்தி வந்தது.
இது குறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஜெப் அலார்டிஸ் கூறியிருப்பதாவது: பாலினத் தகுதி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது விரிவான ஆலோசனை பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்றார்.
ஐசிசி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனையாக சரித்திரம் படைத்த டேனியல் மெக்காஹே, இனி மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான மெக்காஹே, கனடா மகளிர் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.