» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

செவ்வாய் 21, நவம்பர் 2023 12:34:08 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஸ்பிரிட்டட் யூத் கால்பந்தாட்ட கழகத்தின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி கேடிசி நகர் உள்ள மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இறுதிப் போட்டியன்று சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் டி ஆர் தமிழரசு ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற எஸ் ஒய் எஃப் சி சிறப்பு விருந்தினர் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி ஆர் தமிழரசு பரிசு மற்றும் வெற்றி கோப்பையை வழங்கி கௌரவித்தார்

விழாவில் ஸ்பிரிட்டட் யூத் கால்பந்தாட்ட கழக செயலாளர் மெரிண்டோ வி ராயன், தலைவர் ஜெரி ரொட்ரிகோ, பொருளாளர் செல்வம் பொனிப்பாஸ் ரமேஷ் டீகோ நிர்வாகிகள பிராங்கிளின், செல்வக்குமார், பாலன், தொம்மை, டெரிக் மற்றும் எம் எஸ் டி தினேஷ் சுசிகரன், பயிற்சியாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்களாக ஜெபிஸ், தோமா மற்றும் ஹிரிதரன் ஆகியோர் செயல்பட்டனர் ..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory