» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 12:34:08 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஸ்பிரிட்டட் யூத் கால்பந்தாட்ட கழகத்தின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி கேடிசி நகர் உள்ள மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இறுதிப் போட்டியன்று சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் டி ஆர் தமிழரசு ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற எஸ் ஒய் எஃப் சி சிறப்பு விருந்தினர் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி ஆர் தமிழரசு பரிசு மற்றும் வெற்றி கோப்பையை வழங்கி கௌரவித்தார்
விழாவில் ஸ்பிரிட்டட் யூத் கால்பந்தாட்ட கழக செயலாளர் மெரிண்டோ வி ராயன், தலைவர் ஜெரி ரொட்ரிகோ, பொருளாளர் செல்வம் பொனிப்பாஸ் ரமேஷ் டீகோ நிர்வாகிகள பிராங்கிளின், செல்வக்குமார், பாலன், தொம்மை, டெரிக் மற்றும் எம் எஸ் டி தினேஷ் சுசிகரன், பயிற்சியாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்களாக ஜெபிஸ், தோமா மற்றும் ஹிரிதரன் ஆகியோர் செயல்பட்டனர் ..