» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன்

திங்கள் 16, அக்டோபர் 2023 5:04:40 PM (IST)



ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தில்லியில் நேற்று (அக்டோபர் 16) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைக்கும்  முதல் வெற்றி இதுவாகும். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறியது போல நாங்கள் இதுபோன்று உலகக் கோப்பைத் தொடரை தொடங்க நினைக்கவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவோம். உண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு  மிகப் பெரிய பின்னடைவு. எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory