» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை விரட்டி பாகிஸ்தான் சாதனை...!

புதன் 11, அக்டோபர் 2023 11:22:47 AM (IST)

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக விரட்டி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷாபீக் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் சதத்தால் 48.2 ஓவரில் 345 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 328 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பாகிஸ்தான் நேற்று முறியடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory